கோவில்பட்டி பள்ளியில்  கிறிஸ்து பிறப்பு பெருவிழா

கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா  கொண்டாடப்பட்டது. 

கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா  கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு, புனித வளனார் ஆலய உதவி பங்குத்தந்தை அருள்அந்தோணி மிக்கேல் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் புஷ்பா முன்னிலை வகித்தார்.  கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் லூயிஸ் இன்பராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். ஓய்வு பெற்ற மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் ஷீலாராணி, புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் அலெக்ஸ்ஜான், தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை ராஜேஸ்வரி, முன்னாள் தலைமையாசிரியர் அந்தோணி ஆகியோர் பேசினர். 
தொடர்ந்து, மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்த நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது. பள்ளி முதல்வர் தயா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com