உடன்குடி அருகே சீயோன் நகர் பரி.சீயோன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா நடைபெற்றது.
விழாவுக்கு, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில குருத்துவ செயலர் மோசஸ் ஜெபராஜ் தலைமை வகித்தார். சபை மன்றத்துக்குள்பட்ட 17 சேகரங்களில் இருந்து பங்கேற்ற அனைவருக்கும் கிறிஸ்தியாநகரம் உதவி சேகர குரு ஜாண் சாமுவேல் மரக்கன்றுகளை வழங்கினார். விழாவை சபை மன்றத் தலைவர் கோல்டுவின் ஜெபம் செய்து தொடங்கிவைத்தார்.
சீயோன் ஆலய வளாகம் மற்றும் ஊர் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆண்கள் ஐக்கிய சங்கச் செயலர் ஜாண் வெஸ்லி மற்றும் சேகர குருக்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.