சிவராத்திரியை முன்னிட்டு தோப்பூரில் திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த பூஜையை, மாவட்ட பொதுச் செயலர் பெ.சக்திவேலன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். நாசரேத் இந்து அன்னையர் முன்னணி நகரத் தலைவி பரமேஸ்வரி பூஜையை வழி நடத்தினார். தொடர்ந்து விநாடி-வினா, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், ஒன்றிய துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் தங்கபெருமாள், ஒன்றியச் செயலர் சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.