தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி சண்முகபுரத்தில் உள்ள இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில் பொங்கலை முன்னிட்டு, பொங்கல் பானையுடன் பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டு, உலக அமைதி மற்றும் மழைவளம் வேண்டி 251 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, பஜனை பாடலுடன், பத்திரகாளி, மாரியம்மாள், உச்சிமாகாளி அம்மனுக்கு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பூசாரி ஆறுமுகசாமி செய்திருந்தார்.