இளம்பெண் தற்கொலை

கயத்தாறு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கயத்தாறு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
கயத்தாறையடுத்த அய்யனார்ஊத்து கீழத் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகள் முத்துலட்சுமி (20). கயத்தாறில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.-யில் தையல் பயிற்சி படித்து வந்த இவருக்கு, அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கமாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்த முத்துலட்சுமியை, கயத்தாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com