தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகளையும் திங்கள்கிழமை (ஜன.15) மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகளையும் திங்கள்கிழமை (ஜன.15) மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜன. 15) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றையதினம், மதுபான விற்பனை, மதுபானத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com