கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள் மற்றும் காயமடைந்தவர்கள் என 34 பேருக்கு பொது நிவாரண நிதியை கோட்டாட்சியர் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் சாலை விபத்து பொது நிவாரண நிதியின்கீழ் கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 22 பேரின் வாரிசுகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 22 லட்சமும், காயமடைந்த 12 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 6 லட்சத்துக்கான காசோலைகளை கோட்டாட்சியர் விஜயா வழங்கினார்.
கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சூரியகலா, தலைமை எழுத்தர் தங்கையா மற்றும் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.