கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டத்துக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க் கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் விஜயா கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். முகாமில், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சூரியகலா, அலுவலக தலைமை எழுத்தர் தங்கையா, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டச் செயலர் முத்துகாந்தாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.