கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில், ரூ. 1 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்காக, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கினர். வங்கி ஊழியர்களின் பங்களிப்புடன் வங்கியும் இணைந்து ரூ. 1 கோடிக்கான காசோலையை அந்த மாநில தொழில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஜெயராமனிடம் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி. ராமமூர்த்தி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.