அரியலூர் மாவட்டம், நடுவலூர் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜயங்கொண்டம் மின்சார வாரிய உதவிச் செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூர் மாவட்டம், நடுவலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான நடுவலூர், சுத்தமல்லி, பருக்கல், காக்காபாளையம், சுந்தரேசபுரம், வெண்மான்கொண்டான், உல்லியகுடி, சாத்தம்பாடி, காசாங்கோட்டை, தத்தனூர், பொட்டகொல்லை, மூர்த்தியான் ஆகிய பகுதிளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது.