அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்துக்கு வரலாற்றுத் துறை தலைவர் மேஜர் ஜி. இருளப்பன், கல்லூரி முன்னாள் முதல்வர் இல.தியாகராஜன், ஈவேரா கல்லூரிப் பேராசிரியர் பி.
முருகானந்தம், பேராசிரியர்கள் பெ. ரவிச்சந்திரன்,தெ. ஆறுமுகம், ப. ஆனந்தகுமார் உள்ளிட்டோர் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கல்லூரி மாணவ,மாணவிகளும் மலர் தூவினர்.