ஜயங்கொண்டத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் தமுமுகவினர் காந்திப்பூங்கா முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் தமுமுகவினர் காந்திப்பூங்கா முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தமுமுக மாவட்டப் பொருளாளர் கமாலுதீன்  தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் சாகுல்ஹமீது, துணைச் செயலர் லியாகத்அலி, ஹசன்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வரலாற்று
ஆய்வாளர் தஸ்தகீர் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தார். 
திமுக மாநில இளைஞரணி இணைச் செயலர் சுபா சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் மணிவேல்,   இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் உலகநாதன், திக மண்டலச் செயலர்  
சி. காமராஜ், பேராசிரியர் அபுல்பசல் உள்ளிட்டோர்  பேசினர். நகரச் செயலர் அப்துல்ரஷீத் வரவேற்றார்.   மாவட்ட மருத்துவர் அணி செயலர் சலீம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com