வீராக்கன் கிராமத்தில் உலக மண்வள  தின விழா

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வீராக்கான் கிராமத்தில் வட்டார வேளாண் துறை சார்பில் உலக மண் வள தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வீராக்கான் கிராமத்தில் வட்டார வேளாண் துறை சார்பில் உலக மண் வள தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செந்துறை வட்டார வேளாண் மைய உதவி இயக்குநர் நாகராஐன் தலைமை வகித்து 50 விவசாயிகளுக்கு மண் வள அட்டையை வழங்கிப் பேசினார். வேளாண் அலுவலர் ராஜேந்திரன் பங்கேற்று மண்
ஆய்வின் முக்கியத்துவம் குறித்தும், மண் ஆய்வின்படி உரமிடுவதால் உரச் செலவு குறைந்து மண்வளம் பாதுகாக்கப்படுவது குறித்தும் விளக்கினார். 
அரியலூர் மண்வள ஆய்வுக்கூட உதவி அலுவலர் ஸ்ரீதேவி, மண்மாதிரி எடுப்பது குறித்தும், எந்தெந்த பயிர்களுக்கு எவ்வளவு ஆழத்தில் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் செயல் விளக்கமளித்தார்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் ராஜா, மலர்கொடி, ஒளிச்செல்வி மற்றும் அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள்
மார்கண்டன்,சிவா ஆகியோர் செய்தனர். உதவி வேளாண் அலுவலர் பாரி நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com