அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 17) மாதாந்திர பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் செங்கமேடு, சேந்தமங்களம், சிலுப்பனூர், மதுராநகர், அசாவீரன்குடிகாடு, குறிச்சிக்குளம், பூமுடையான்குடிகாடு, துளார், கொடுக்கூர், இடையகுறிச்சி, குவாகம், வல்லம், புதுப்பாளையம், மணக்குடையான், தாமரைப்பூண்டி, முள்ளுக்குறிச்சி,ஆதனக்குறிச்சி,ஆலத்தியூர்,முதுக்குளம்,மாராக்குறிச்சி, இருங்களாக்குறிச்சி, பாசிக்குளம்,பூக்குழி மற்றும் சிலம்பூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் மு.கணேசன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.