அரியலூரில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அமைக்க கோரிக்கை

அரியலூரில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரியலூரில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
விக்கிரமங்கலத்தில் அச்சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற நுகர்வோர் தின விழாவில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
கும்பகோணத்தில் இருந்து விக்கிரமங்கலம் வரை அரசுப் பேருந்து இயக்க வேண்டும், அம்பாப்பூரில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும், விக்கிரமங்கலத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சமுத்திரம் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சுவாமிநாதன், மல்லிகை சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணாமலை, முத்தையன், ராஜேந்திரன், சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக, பொதுச்செயலர் சக்கரவர்த்தி வரவேற்றார். முடிவில் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com