அரியலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (19 ஆம் தேதி) நடைபெறும் வருவாய் கிராமங்களுக்கான மூன்றாம் நாள் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நில அளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்து உடனடித் தீர்வு பெறலாம்.
அரியலூர் வட்டாட்சியரகத்தில்... கீழப்பழூர் உள் வட்டத்திற்குட்பட்ட மல்லூர், வாரணவாசி, பார்பனச்சேரி, பூண்டி, மேலப்பழூர், கீழையூர், கீழப்பழூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர் (வடக்கு),(தெற்கு), பளிங்காநத்தம், கரைவெட்டி, கீழகாவட்டாங்குறிச்சி, வெற்றியூர்.
ஜயங்கொண்டம் வட்டாட்சியரகத்தில்... உடையார்பாளையம் வட்டத்தில் தா. பழூர் உள்வட்டத்திற்குட்பட்ட இருகையூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், தா. பழூர், கோடங்குடி (வடபாகம்), கோடங்குடி (தென்பாகம்), நாயகனைப்பிரியாள், இடங்கண்ணி, உதயநத்தம் (மேல்பாகம்), உதயநத்தம் (கீழ்பாகம்), அணைக்குடம் (பொற்பதிந்தநல்லூர் உட்பட), சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புகுடி.
செந்துறை வட்டாட்சியரகத்தில்... செந்துறை வட்டத்தில் மாத்தூர் உள்வட்டத்திற்குட்பட்ட சன்னாசிநல்லூர், தளவாய் (வடபாகம்), தளவாய் (தென்பாகம்), ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, மணக்குடையான், அயன்தத்தனூர், குழுமூர், மனப்பத்தூர், அசாவீரன்குடிகாடு, துளார் ஆகிய கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்தார்.