அரியலூர் மாவட்டம், ஈச்சங்காட்டிலுள்ள டாஸ்மாக் கடையை சூறையாடி ரூ. 10.97 லட்சத்திலான மதுபாட்டில்களை சேதப்படுத்தி,அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக 40 பெண்கள் உள்பட 70 பேர் மீது தளவாய் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனர்.
இந்த மதுக்கடையால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவதால் அதை உடனடியாக அகற்றுமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள்,புதன்கிழமை கடையின் வெளியே மதுப்பாட்டில்களைபோட்டு அடித்து நொறுக்கினர்.