பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் தேரடி மாதாகோவில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், அரியலூர் ஒன்றியம் மற்றும் நகரத்தில் குடிநீர் வசதி செய்துதர வேண்டும். அரியலூர் பேருந்து நிலையத்தில் அனைவரும் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது கழிப்பிட வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். விவசாயம் மற்றும் மாணவர்களுக்கு வழங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர். சிற்றம்பலம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். அழகர்சாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.