அரியலூர் வருவாய் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் வட்டாட்சியர் தா.முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரியலூர் வருவாய் வட்டத்தில் 12 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறிப்பிட்ட இனத்தவர்கள் மற்றும் செந்துறை வட்டத்தை மட்டும் வசிப்பிடமாக கொண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
5-ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அட்டவணை வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 35 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
இப்பதவிக்கு தகுதியுடைய, அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர் தங்களது முழு விவரங்களுடன் புகைப்படம், சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சுயமுகவரியிட்ட ரூ.30-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட அஞ்சல் உறையுடன் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 01.06.2017
அன்று மாலை 5.00 மணிக்குள் சென்றுசேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், கடந்த 25.11.2015 மற்றும் 01.09.2016 ஆம் ஆண்டில் கிராம உதவியாளர் நியமன பணியிடங்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.