அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு நிகழாண்டுக்கான ஆங்கில மொழிக் கல்வி மற்றும் கணினி திறன் போன்ற மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படவுள்ளது.
கை, கால் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கும் இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 18, அதற்கும் மேற்பட்ட வயதுடையோர் மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.
எனவே, அரியலூர் மாவட்டத்திலுள்ள கை, கால் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வரும் 17-ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.