கூட்டுறவு வார விழாவையொட்டி அரியலூர் ரயில் நிலையம் அருகேயுள்ள வேளாண் கூட்டுறவு சங்கத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மண்டல இணை பதிவாளர் இரா. தயாளன் தலைமையில், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் கே.கே. செல்வராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் ஜமால் முகமது, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன் மற்றும் கூட்டுறவு சார்- பதிவாளர்கள் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக மண்டல இணை பதிவாளர் இரா.தயாளன், கூட்டுறவு சங்க வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.