அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவம்பர் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.