அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள பொன்குடிக்காடு-துளார் சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செந்துறை அருகிலுள்ள பொன்குடிக்காட்டிலிருந்து சிறுகளத்தூர் வழியாக பெரியாக்குறிச்சி மற்றும் துளார் செல்லும் சாலையில் பொன்பரப்பி சாலை சேருமிடத்தில் சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. தற்போது பெய்த மழைநீரும் சேர்ந்து சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் சாலையை கடக்கும் சிலர் தவறி சேற்றில் விழுந்து விடுகின்றனர்.
இச்சாலையை சிறுகளத்தூர், துளார், பூமுடையான்குடிக்காடு கொடுக்கூர், இருங்களாக்குறிச்சி, ஆலத்தியூர் பொது மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த சாலையில் உள்ள பள்ளங்களை நெடுஞ்சாலை துறையினர் விரைவாக சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.