அரியலூர் மாவட்டம் த.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ சிந்தாமணி கிராம ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் நாய் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பள்ளியில் 500 லிட்டர் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை காலை இங்கு வந்த பெண் தண்ணீர் குழாயைத் திறந்தபோது துர்நாற்றத்துடன் நீர் வந்தது.
சந்தேகமடைந்து தொட்டி மேல் ஏறிப் பார்த்தபோது அதில் ஒரு நாயை யாரோ கொன்று போட்டுச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நாயை அப்புறப்படுத்தி தொட்டியை சுத்தம் செய்த பெற்றோர், அப்பகுதி இளைஞர்கள் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்தோர் மீது நடவடிக்கை கோரியும் பள்ளிக்கு போதி பாதுகாப்பு செய்ய கோரியும் பள்ளியை முற்றுகையிட்டனர். சம்பவம் குறித்து பள்ளி தலைமையாசிரியை அமுதா அளித்த புகாரின் பேரில் தா. பழுர் போலீஸார் விசாரிக்கின்றனர்.