பள்ளியில் ஓவியப் போட்டி

உலக மரபு வார விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் தொல்லியல் துறை அகழ்வைப்பகம் சார்பில்

உலக மரபு வார விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் தொல்லியல் துறை அகழ்வைப்பகம் சார்பில்   உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கிடேயே ஓவிய போட்டிசெவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
 நவ.19 முதல்   24 ஆம் தேதி வரை நடைபெறும் உலக மரபு வார விழாவை   முன்னிட்டு ஜயங்கொண்டத்தில் திங்கள்கிழமை விழிப்புணர்வு  பேரணியும், செவ்வாய்க்கிழமை உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில்   மாணவர்களுக்கிடையே ஓவிய போட்டியும் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் நினைவு சின்னங்கள்,   பழமை வாய்ந்த கோயில்கள், சிற்பங்கள் ஆகியவற்றை வரைந்தனர். 
இதில் 20 ஓவியங்கள் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டன.  அவர்களுக்கு  நவ.25 அன்று கங்கைகொண்டசோழபுரம்   அகழ்வைப்பகத்தில் நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் அகழ்வைப்பக காப்பாட்சியர் பிரபாகரன், பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் பாண்டியன்   பள்ளி ஓவிய ஆசிரியர் குமார், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com