பாரதப் பிரமதரின் தூய்மையே சேவை திட்டத்தையொட்டி, அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், நாட்டு நலப் பணித் திட்டம் (அலகு-1) சார்பில் தூய்மைப் பணிகள் முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முகாமை கல்லூரி முதல்வர்(பொ)சா. சிற்றரசு தொடக்கி வைத்து, சமூக சேவையின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே வலியுறுத்தினர். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வெ.கருணாகரன் செய்தார். பணியின்போது என்.எஸ்.எஸ் அலகு 1-யைச் சார்ந்த மாணவர்கள் சுமார் 100 பேர் கலந்துகொண்டு, கல்லூரி வளாகத்தில் இருந்த சீமைக்கருவேல முள்செடிகள், எருக்கு செடிகள் மற்றும் பார்த்தீனியம் செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.