அரியலூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
ஆட்சியர் க. லட்சுமிபிரியா உத்தரவையடுத்து டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுவதையொட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டக் கல்வி அலுவலர் கலைமதி,மாவட்டக் கல்வி ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். பள்ளித் தலைமை ஆசிரியர்,உதவித் தலைமை ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியை புஷ்பம்,உடற்கல்வி ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் செய்தனர்.