தூய்மை சேவை இயக்கம்:உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் தூய்மை சேவை இயக்கம் சார்பில் தூய்மைப் பணி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் தூய்மை சேவை இயக்கம் சார்பில் தூய்மைப் பணி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் க. லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகேஸ்வரி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.
தூய்மை சேவை இயக்கத்தின் சார்பில், செப். 15 முதல் மகாத்மா காந்தி பிறந்தநாளான அக். 2 வரை சுத்தமான, சுகாதாரமான பாரதத்தை உருவாக்க, தூய்மைப் பணிகளை ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகரங்களில் மற்றும் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com