அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஜயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பொ. சின்னதுரை(65). இவர் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு ஜயங்கொண்டத்தில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக ஜயங்கொண்டம் -விருத்தாசலம் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் சின்னதுரை மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த திருவண்ணாமலையை சேர்ந்த சுப்புராயன் மகன் ராமலிங்கம் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.