நவராத்திரி விழா: காமாட்சி அம்மன் அலங்காரத்தில் சுந்தராம்பிகை

அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருள்மிகு சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருள்மிகு சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.
மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும், ஸ்ரீசாரதா நவராத்திரி ஆராதனை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கடந்த 20 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் முதல் நாளில் அம்பாள் தவக்கோலம் அலங்காரத்திலும், 2 ஆம் நாளில் அன்னபூரணி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3 ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு காமாட்சி அம்மாள் அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com