அரியலூரில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அரியலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக பன்னீர்செல்வம், துணைத் தலைவராக கல்லங்குறிச்சி எஸ்.பாஸ்கரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடன் 11 உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரி நல்லமுத்து பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
அதேபோல, அரியலூர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத் தலைவராக கணேசன், துணைத் தலைவராக ஜீவாஅரங்கநாதன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.