அனுமதியின்றி  மது விற்றவர் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே  அனுமதியின்றி மது விற்றவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே  அனுமதியின்றி மது விற்றவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். 
 உடையார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மணகெதி கிராமத்தைச் சேர்ந்த தங்கையன் மகன் தனராஜ்(30) என்பவர் தனது வீட்டின் பின்புறம் பகுதியில் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com