அரியலூர் மாவட்டம் மல்லூர், புங்கங்குழி , வேம்புகுடி, பாப்பாக்குடி (வ), ஆனந்தவாடி , அய்யூர் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 17) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதிபெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் மு.விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.