உடையார்பாளையம் அருகே பைக் மீது லாரி மோதி 3 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள வாணத்திரையான்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள வாணத்திரையான்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் குணசேகரன்(63). விவசாயி. செவ்வாய்க்கிழமை இவரும், இவரது உறவினர்களான கடம்பூரை சேர்ந்த காசிநாதன் மகன் ரவி(45), குடிகாட்டை சேர்ந்த வீராசாமி மகன் கலியபெருமாள் ஆகிய 3 பேரும் தத்தனூரில் இருந்து ஒரே இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, மூர்த்தியான் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.  இதில் பலத்த காயமடைந்த குணசேகரன், ரவி, கலியபெருமாள் ஆகிய 3 பேரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.  போலீஸார் வழக்குப் பதிந்து  லாரி ஓட்டுநரான தேனி மாவட்டம் கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வனராஜ் மகன் பிரசாத்(25) என்பவரைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com