ஆண்டிமடம் அருகே பள்ளி மாணவர் மாயம்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவரைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவரைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிமடம் அருகிலுள்ள சாத்தனம்பட்டு மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம்.இவரது மகன் அன்பரசன்(15).ஆண்டிமடத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்ற அன்பரசன் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடு என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் ராமலிங்கம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, காணாமல் போன அன்பரசனைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com