தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தெரு நாய்கள் ஏராளமாக பெருகி விட்டன.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தெரு நாய்கள் ஏராளமாக பெருகி விட்டன. அவை சாலையின் குறுக்கே அங்குமிங்கும் வேகமாக ஓடி சண்டையிடுவதால் சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.
மேலும், கூட்டாக சேர்ந்து கிராமங்களில்  சென்று ஆடு, கோழிகளை கொன்று தின்று விடுகின்றன.
இதனால் கால்நடைகள் வளர்ப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். 
இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகளை விரட்டிச் சென்று அச்சத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தெருநாய்களை பிடிக்க உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர் சோழன்குடிக்காடு கணேசன் அண்மையில் ஆட்சியர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com