அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வட்டம் வெங்கனூர், குருவாடி, உடையார்பாளையம் வட்டம் வங்குடி, ஸ்ரீ புரந்தான் (தெ) , ஆண்டிமடம் வட்டம், மேலூர், செந்துறை வட்டம் குழுமூர் ஆகிய 6 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (பிப்.16) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம், குன்னம் வட்டம், பேரளி (வ), ஆலத்தூர் வட்டம், ஆதனூர் (வ) ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இம்முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இங்கு பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகை ரசீது வழங்கப்படும். உடனடியாக தீர்வுகாண இயலாத விண்ணப்பங்கள் குறித்து மனுதாரருக்கு 30 நாள்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும். எனவே, சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.