ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம் ஜயங்கொண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் அரங்கசாமி, பொருளாளர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பொங்கல் கருணை தொகை வழங்கப்படாதவர்களுக்கு உடனே வழங்க வேண்டும். 7 ஆவது ஊதியக்குழுவில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பாஷ்யம், சிதம்பரம், பட்டுசாமி, ராஜமாணிக்கம், தட்சணாமூர்த்தி, கலியபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, துணை செயலாளர் கலியபெருமாள் வரவேற்றார். இறுதியில் மா.கலியபெருமாள் நன்றி கூறினார்.