அரியலூர் மாவட்டத்தில் 19 நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்கிட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 7 கொள்முதல் நிலையங்கள் கடந்த மாதம் திறக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். தற்போது காஃரீப் பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கீழகொளத்தூர், இலந்தைக்கூடம், கரைவெட்டி, கள்ளர் ஆகிய நான்கு கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செவ்வாய்க்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த நெல் கொள்முதல் நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் மு.விஜயலட்சுமி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.