தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை பேரணியில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை பேரணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்தும், செந்துறை பகுதி விவசாயிகளுக்கு முந்திரி கன்றுகள் வழங்க வேண்டும். முந்திரி ஆராய்ச்சி நிலையம், தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தியும் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அச்சங்க நிர்வாகிகள் பேரணியில் ஈடுபட்டனர்.
உடையார் பாளையம் பிரிவு சாலையில் தொடங்கிய பேரணி, செந்துறை வேளாண் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பின்னர், வேளாண் உதவி இயக்குநர் நாகராஜனிடம் அவர்கள் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
பேரணிக்கு அச்சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பரசிவம், ஒன்றிய தலைவர்கள் சின்னப்பன், பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com