அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள எம்.கே.பாரா மெடிக்கல் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சனிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டன.
கல்லூரி நிறுவனர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.செந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி கலந்து கொண்டு தையல் பயிற்சி முடித்த 20 பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கல்வி அறக்கட்டளை தலைவர் சேகர், கொசமற்றம் நிதி நிறுவன மேலாளர் சண்முகநாதன், ஸ்கை கணினி நிறுவனர் சங்கர்குரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தையல் பயிற்சி ஆசிரியர்கள் சங்கீதா மற்றும் ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.