புகழூர் காகித ஆலை சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு ரூ.2.65 லட்சம் அண்மையில் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ், ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 7 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவித்தொகையாக ரூ.1.95 லட்சமும், 3 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் புனரமைப்பு நிதியாக ரூ.70,000 என மொத்தம் ரூ.2.65 லட்சத்துக்கான காசோலை பயனாளிகளுக்கு அண்மையில் ஆலையின் முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி) சுப்ரமணியன், மனித வளத்துறை பொதுமேலாளர் பா.பட்டாபிராமன் ஆகியோர் வழங்கினர்.