குடிநீர் கோரி மாயனூரில் சாலை மறியல்

கரூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், மாயனூரில் காவிரி குடிநீர் ஊராட்சி மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக அப்பகுதியினருக்கு போதிய அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதுகுறித்து அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியினர் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை காலை மாயனூர் ரயில்வே கேட் முன் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மாயனூர் போலீஸார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com