கரூரில் தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா

கரூரில் முனைவர் அ.கோவிந்தராஜூ எழுதிய "வா நம் வசப்படும்' உள்ளிட்ட 7 தமிழ் நூல்களின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

கரூரில் முனைவர் அ.கோவிந்தராஜூ எழுதிய "வா நம் வசப்படும்' உள்ளிட்ட 7 தமிழ் நூல்களின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூர் வள்ளுவர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் இரா.மோகன் தலைமை வகித்தார். அரிமா மேலை பழனியப்பன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர் இரா.மோகன் எழுதிய கவிதைச் சிறகுகள், இரா.இரவியின் படைப்புலகம், முனைவர் அ.கோவிந்தராஜூ எழுதிய "வா நம் வசப்படும்',பேராசிரியர் நிர்மலா மோகன் எழுதிய படித்தாலே இனிக்கும், புதுகை மு.தருமராசன் எழுதிய நயனுறு நடைச்சித்திரம், பேராசிரியர் பானுமதி தருமராசன் எழுதிய வரலாறு படைத்த வைர மங்கையர்கள், கவிஞர் இரா. இரவி எழுதிய வெளிச்ச விதைகள் ஆகிய 7 நூல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், திருக்குறள் பேராயம் ப.தங்கராசு நூல்களை வெளியிட, வள்ளுவர் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் பெற்றுக் கொண்டார். இதில்,சிதம்பரம் அய்யங்கார் ரெட்டி, தீபம் சங்கர்,ஜி.எஸ்.பாலகிருஷ்ணன், பழனி முருகன் ஜூவல்லர்ஸ் பாலமுருகன்,மு.தமிழரசு ஆகியோர் நூல்களின் சிறப்புப் படிகளைப் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில்,இரா.இராமசாமி, முனைவர் இரா.கா.மாணிக்கம் ஆகியோர் நூல்களைத் திறனாய்வு செய்தனர். வானதி பதிப்பகம் வானதி இராமநாதன், இரா.சரவணப் பெருமாள், முனைவர் எஸ்.டி.குணசேகர், முனைவர் இரா.லட்சுமண சிங் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்.முரளி விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com