தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக கரூர் மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் பேங்க் கே.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேங்க் கே.சுப்ரமணிய கரூர்மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார்.