தேசிய விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு சீருடைகள் வழங்கல்

தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்றவர்களுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்றவர்களுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று முதல் 3 இடங்களில் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு முறையே ரூ.6,000, ரூ.4,000 மற்றும் ரூ. 2,000 மதிப்பிலும்  விளையாட்டுச் சீருடைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட உள்ளது.  கடந்த 2016-17 ஆம் ஆண்டில் தேசிய அளவில் பதக்கங்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள் தங்களது பெயர், முழு முகவரி மற்றும் விளையாட்டு அசல் சான்றிதழ், இரு நகல்களுடன் கரூர் மாவட்ட விளையாட்டரங்கம், மாலநாயக்கன்பட்டி கிராமம், நீதிமன்றம் பின்புறம், தாந்தோணிமலை-639005 என்ற முகவரியில் வரும் 25 ஆம் தேதிக்குள் நேரிடையாக வந்து தங்களது பெயர்களைப் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com