குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த சிவாயம் இந்திரா காலனியைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவா(25). இவர் ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் பனிக்கம்பட்டி-அய்யர்மலை சாலையில் ரமேஷ் என்பவரது தோட்டம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து குளித்தலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.