பாலவிடுதி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், கடவூரை அடுத்த கிழக்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மணிமாறன்(18). இவர் ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ளஆண்டியப்பன் என்பவரது தோட்டத்து வழியாகச் சென்றபோது அங்கு கிடந்த மின்வயரை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாலவிடுதி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.