மாவட்ட அளவிலான பேச்சு மற்றும் ரங்கோலி போட்டியில் கரூர் தாந்தோணிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் அண்மையில் விவேகானந்தர் சீடர் நிவேதிதா இந்தியாவிற்கு ஆற்றிய தொண்டு எனும் தலைப்பில் பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இதில் கரூர் தாந்தோணிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.ராஜராஜேஸ்வரி முதல் பரிசுபெற்றார். ரங்கோலி போட்டியில் பள்ளி மாணவிகள் கே.விவர்தனி, ஆர்.பிரகதி, என்.நாச்சம்மாள் ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர்.
மாணவிகளை பள்ளியின் தாளாளர் பேங்க் கே.சுப்ரமணியன் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மணிமொழிராஜேந்திரன், துணை முதல்வர் பி.ஜெயசித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.