கரூர் அரசு கலைக்கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
கல்லூரியின் விண்ணப்பம் விநியோகப் பணியை தொடங்கி வைத்து கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் கூறியதாவது:
தமிழகத்தில் ஏ கிரேடு அந்தஸ்து பெற்ற எங்கள் கல்லூரியில் தற்போது முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி திங்கள் கிழமை தொடங்கியுள்ளது. தாவரவியல், வேதியியல், வணிகவியல், பொருளாதாரவியல், ஆங்கிலம், வரலாறு, கணிதம், தமிழ், விலங்கியல் உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கு மொத்தம் உள்ள 377 இடங்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. வரும் 30 ஆம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வழங்குவதற்கும் வரும் 30-ஆம் தேதி கடைசி. இதையடுத்து ஜூலை 5 ஆம் தேதி மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு நடத்தி அதன்மூலம் படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படும் என்றார்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.